Posts

Showing posts from December, 2017

அரசு கடன் பத்திரங்கள் : பாதுகாப்பான முதலீடு

அரசு கடன் பத்திரங்கள் : பாதுகாப்பான முதலீடு கடந்த இரு ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு நிதி நிறுவனங்கள் வெளியிட்ட கடன் பத்திரங்கள் தர மதிப்பீட்டு பிரச்சினைகளை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் பதற்றத்தில் இருக்கின்றனர்.கடன் பத்திர முதலீட்டில் பாதுகாப்பும் அதே சமயத்தில் ஓரளவு லாபமும் அடையவேண்டுமென்றால் ரிசர்வ் வங்கி வெளியிடும் `இந்திய அரசு 8 சதவீத கடன் பத்திரங்கள்-2003ல்’ முதலீடு செய்யலாம். தற்போது வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், அரசு வெளியிடக் கூடிய கடன் பத்திரங்களுக்கு 8 சதவீத வட்டி விகிதம் என்பது கவரக்கூடியதாக இருக்கிறது. என்எஸ்சி, கேவிபி, அஞ்சலக 5 ஆண்டு டெபாசிட் திட்டம் உட்பட அரசால் வெளியிடப்படும் மற்ற கடன் பத்திரங்கள் ஆகியவை கிட்டத்தட்ட கால வரையறை கொண்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு 8 சதவீதத்துக்கும் குறைவாகவே வட்டி வழங்கப்படுகிறது. 10 முதல் 20 சதவீதம் வரை வரி அமைப்பில் உள்ள முதலீட்டாளர்கள் ஆறு ஆண்டுகளுக்கு தங்களது பணத்தை எடுக்காமல் முதலீடு செய்ய விரும்பினால் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். நன்மைகள் `8 சதவீத கடன் பத்திரங்கள்-2...

அலசல்: அனைவரும் சமமா?

அலசல்: அனைவரும் சமமா? ஆட்டோமொபைல் துறையில் முக்கியமான நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனம் கடந்த வாரம் ஒரு முக்கியமான மாற்றத்தை செய்தது. நிறுவனத்தில் அதிகாரிகளுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைய, அவர்களின் பதவிகளை டாடா மோட்டார்ஸ் நீக்கியது. பொதுமேலாளர், துணைப்பொது மேலாளர், துணைத் தலைவர் என அனைத்து பதவிகளும் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் 10,000 பணியாளர்களின் பதவிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குழுத்தலைவரின் விசிட்டிங் கார்டில், பெயர், தலைவர், பணிபுரியும் பிரிவு ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். குழு உறுப்பினர்களுக்கு பெயர், பணிபுரியும் பிரிவு மட்டுமே அச்சிடப்பட்டிருக்கும். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட முக்கிய 10 அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி இருக்கும். இதன் மூலம் பணியாளர்கள் தங்களது பதவிகளில் கவனம் செலுத்தாமல் வேலைகளில் கவனம் செலுத்துவார்கள், குழு மனப்பான்மை மற்றும் புதுமைகள் நடக்கும் என நிறுவனம் கருதுகிறது. தவிர இனி பதவி உயர்வுகளும் முற்றிலும் நிறுத்தப்படும், எப்போது உயர் பதவிகள், காலியாகிறதோ அப்போதுதான் நிரப்பப்படும் என என மனித வளப்பிரிவின் தலைவர் கஜேந்திரா எஸ் சந...

சபாஷ் சாணக்கியா: நண்பேண்டா...

சபாஷ் சாணக்கியா: நண்பேண்டா... எனக்குப் பரிச்சயமான ஒருவர். நண்பர் என்று சொல்ல மாட்டேன்.தெரிந்தவர், அவ்வளவு தான். தடாலடிப் பேர்வழி. கடகடவெனப் பேசுவார். யார் அவர் என்கிறீர்களா? உங்களுக்கும் தெரிந்த குமார்தான்! ஒரு முறை என்னிடம் வந்த குமார், தான் திருப்பதி செல்வதாகவும் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டார். அவர் எனக்கு அதிகப் பழக்கமில்லை. இருந்தாலும் ஒரு பெரிய நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன். அவர்கள் எனக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால், குமாரை நன்றாக உபசரித்திருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் கழித்துக் காலை 6 மணிக்கு எனக்கு அந்த விடுதியிலிருந்து கைபேசி அழைப்பு வந்தது. குமார் அங்கே மீண்டும் வந்ததாகவும், 4 பேர் அவருடன் தங்கி இருந்ததாகவும், இரண்டு அறைகளின் சாவியைக் கொடுக்காமலேயே குமார் சென்று விட்டதாகவும் புகார்! நான் பலமுறை முயன்றும், குமார் எனது கைபேசி அழைப்புகளை எடுக்கவே இல்லை! கடைசியில் 'இது என்ன பெரிது, மாற்றுச் சாவி இல்லாமலா இருக்கும்' என அலட்சியமாக பேசினார்.பின்னர் என்ன? எனக்குத் தேவையற்ற தலை குனிவு! `உங...

சபாஷ் சாணக்கியா: சொல்லாதே யாரும் கேட்டால்...!

Image
சபாஷ் சாணக்கியா: சொல்லாதே யாரும் கேட்டால்... ஓர் ஞாயிறு மாலை. குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.3 முதல் 6 வயது சிறுவர் சிறுமியர். நாங்கள் நண்பர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சோபாவிற்குப் பின்னால் சென்று உட்கார்ந்து கொண்டது ஒரு வாண்டு.கதவிற்குப் பின்னால் நின்று கொண்டு எட்டிஎட்டிப் பார்த்தது இன்னுமொரு வாண்டு. திரைச்சீலையால் முகத்தை மூடிக் கொண்டதால் தன்னை யாரும் கண்டு பிடிக்க முடியாதென்ற நினைப்பில் மற்றுமொன்று! அவர்களைக் கண்டுபிடிக்கும் (!) பங்கு அவர்களுள் மிகக் குட்டியாய் இருந்த சிறுமிக்கு! அவள் கண் கட்டவிழ்க்கப் பட்ட பின் அங்குமிங்கும் நோட்டம் விட்டாள். சின்ன அறைதான்.எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்தான்.ஆனால் அவள் மிகச் சிறுமி ஆயிற்றே! கொஞ்சம் தடுமாறினாள்.அதற்குள் அங்கிருந்த நண்பர்கள் மற்ற குழந்தைகள் ஒளிந்திருந்த இடங்களை சைகையால் காண்பிக்க ஆரம்பித்தார்கள்! அந்தச் சிறுமி ஒவ்வொருவராய்த் தொட, பெரும் ஆரவாரத்துடன் விளையாட்டு முடிந்தது! அது சரி, அச்சிறுமிக்கு மற்ற குழந்தைகள் ஒளிந்திருந்த இடங்களை ஏன் மற்றவர்கள் காட்டிக் கொடுத்தார்கள்? சி...

அலசல்: இது சரியா?

Image
அலசல்: இது சரியா? இன்று ஆன்லைன் மூலம் கிடைக்காத பொருளே இல்லை எனலாம். பழங்காலத்து பொருள்கள் முதல் அறிமுகமாகி சில நிமிடங்களே ஆன தயாரிப்புகள் வரை கிடைக்கும். பிரபலமான ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அதைத்தான் வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர். இப்போது மருந்து, மாத்திரைகளைக் கூட ஆன்லைனில் வாங்கும் போக்கு இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதற்கு தீனி போடும் வகையில் பல பார்மசிகளும் ஆன்லைன் வர்த்தகத்தில் களம் இறங்கியுள்ளன. குழந்தைக்குத் தேவையான பொருள்களை குறிப்பாக டயபர் போன்றவற்றை ஆன்லைன் மூலம் வாங்குவது ஏற்புடையது. மருந்துகளையும் ஆன்லைனில் வாங்குவது பெரும்பாலும் சரியாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. சாதக அம்சங்கள்   பெரும்பாலும் தொலை தூரங்களில் இருப்பவர்கள் உள்ளூர் மருந்துக் கடைகளில் உரிய மருந்துகள் கிடைக்காதவர்கள் ஆன்லைன் மூலம் மருந்துப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவது இதில் உள்ள சாதக அம்சம். பாதகங்கள்   இதில் சாதக அம்சங்களை விட பாதங்களே அதிகம். முறைகேடாக அல்லது சட்ட விரோதமாக நடத்தப்படும் ஆன்லைன் பார்மசிகள் காலாவதியான மருந்துகளை அனுப...

பெண் தொழில்முனைவோர்களுக்கு சிறப்புக் கடன்கள்

Image
பெண் தொழில்முனைவோர்களுக்கு சிறப்புக் கடன்கள் பெண் தொழில்முனைவோர்களுக்கு சாதகமான பல வகையான கடன் திட்டங்கள் உள்ளன. அவர்களுக்கு பல வங்கிகளில் சிறப்பு கடன் திட்டங்களும் உள்ளன. வட்டி சலுகை   பெண் தொழில்முனைவோர்கள் இதுபோன்ற சிறப்புத் திட்டங்களில் கடன் பெறும்போது வட்டி சலுகை கிடைக்கும். பொதுவான தொழில்கடன்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு 0.25 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை வட்டியில் சலுகை கிடைக்கும். உதாரணத்துக்கு ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் எஸ்எம்இ பிரிவில் ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான கடனுக்கு 10.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதே வங்கியில் பொதுப்பிரிவினருக்கு 11.95 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. பெண்கள் வாங்கும் கடனுக்கு 1.25 சதவீதம் வட்டி குறைவாகும். அதேபோல எஸ்பிஐ வங்கியில் பெண் தொழில்முனைவோர்கள், 2 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கும் கடனுக்கு 0.50 சதவீதம் வட்டி சலுகை வழங்கப்படுகிறது. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பெண் தொழில்முனைவோர்கள் வாங்கும் கடனுக்கு பரிசீலனை கட்டணம் கிடையாது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ. ...

வங்கிகளின் வாராக் கடன் வசூல்திவால் மசோதா கை கொடுக்குமா?

Image
வங்கிகளின் வாராக் கடன் வசூல்திவால் மசோதா கை கொடுக்குமா? வங்கிகளின் வாராக்கடன் அளவு மட்டும் ரூ. 8 லட்சம் கோடி. இதில் பொதுத்துறை வங்கிகளுக்கு வர வேண்டிய கடன் பாக்கி மட்டும் ரூ. 6 லட்சம் கோடி.2017-ம் ஆண்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் செலவு மதிப்பு ரூ. 9.72 லட்சம் கோடி. ஆக வங்கிகளின் வாராக்கடன் தொகையை வசூல் செய்தால் மத்திய அரசின் பட்ஜெட்டையே போட்டு விட முடியும். வங்கிகளை நலிவடையச் செய்யும் வாராக் கடனை வசூல் செய்ய அனைத்து பகீரத பிரயத்தனங்களையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடன் கொடுத்த நிறுவனங்களின் கழுத்தில் கை வைத்து பணத்தை வசூலிக்க முடியாது. கடனை திரும்பப் பெறுவதில் சில பொருளாதாரக் காரணிகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இப்போது கடன் வசூலுக்கு அரசு எடுத்துள்ள புதிய முயற்சிதான் திவால் மசோதா. ஆம், திவால் மசோதா நடவடிக்கை மூலம் கடனை வசூலிக்க எத்தனித்திருக்கிறது மத்திய அரசு. திவால் மசோதா என்றால் என்ன? மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய மசோதாக்களில் மிகவும் முக்கியமானது திவால் மசோதாவாகும். Insolvency and Bankruptcy Code (IBC) எனப்படும் இந்த மசோதா, கடன் வசூலுக்க...

விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது?

Image
விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது? ஆந்திர பிரதேசத்தில் மிளகாய் பழத்தை கொட்டி எரித்த விவசாயிகள், அய்யாக்கண்ணு தலைமையில் ஒன்றரை மாத காலமாக போராடிய தமிழக விவசாயிகள், மத்திய பிரதேசத்தில் சாலையில் பாலை ஊற்றி, காய்கறிகளை சாலைகளில் கொட்டி விவசாயிகள் போராட்டம் என நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டக் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு புறம் உற்பத்தியில் தன்னிறைவு ஆனால் அதன் பயன் விவசாயிகளை சென்றடையாதது, இன்னொரு புறம் விவசாயமே செய்ய முடியாத அளவுக்கு வறட்சியில் சிக்கிகொண்டது என இரு முக்கிய பிரச்சினைகளை தற்போது விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். உதாரணமாக மஹாராஷ்டிர மாநிலத்தை ஆசியாவின் மிகப் பெரிய வெங்காய சந்தை என்று குறிப்பிடுவர். முந்தைய ஆண்டு கொள்முதல் விலை அதிகமாக இருந்ததால் விவசாயிகளும் அதிகம் பயிரிட்டனர். பருவமழை நன்றாக இருந்ததால் இந்த ஆண்டு உற்பத்தி முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகமாக இருந்தது. அதிக உற்பத்தியால் கடுமையான விலைச்சரிவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் குவிண்டால் 1,200 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் இந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.450 என்ற அளவ...

வாழ்வதற்கு குறைந்த செலவாகும் நகரங்கள்

Image
வாழ்வதற்கு குறைந்த செலவாகும் நகரங்கள் நாளுக்கு நாள் நாம் வாழ்வதற்கு உண்டான செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடுகையில் கிராமம், நகரம் என வேறுபாடு இல்லாமல் அடிப்படைத் தேவைகளுக்கான செலவு அதிகரித்து வந்துள்ளது. இன்றைய நாளில் மிகக் குறைவான பணத்தை வைத்துக் கொண்டு வாழக்கூடிய நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது குறைந்த பட்ஜெட்டில் அன்றாட தேவைகளையும் அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதில் குறிப்பிட்ட சில நாடுகளை பற்றிய தகவல்கள்….. கணக்கீடு சில அடிப்படை தகவல்களை வைத்துக் கொண்டு வாழ்வதற்கு குறைந்த செலவாகும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. வாங்ககூடிய திறன் குறியீடு (Local purchasing power index) வாடகை குறியீடு (Rent index) உணவு பொருட்கள் குறியீடு (Groceries index) நுகர்வோர் விலை குறியீடு (Consumer price index) என நான்கு அளவுகோள்களை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோள்கள் அமெரிக்காவில் உள்ள ந...

சபாஷ் சாணக்கியா: வளைந்து கொடுக்கணுங்க...!

Image
சபாஷ் சாணக்கியா: வளைந்து கொடுக்கணுங்க...! 1980களில் வங்கியில் அதிகாரியாக நான் பணிபுரிந்த பொழுது எங்கள் கிளையில் ஒரு காசாளர்.அதிகம் படிக்காதவர்தான். ஆனால் மிகத் திறமைசாலி. கண்ணை மூடிக் கொண்டே நோட்டுக்களை அதிவேகமாக எண்ணுவார்.அப்பவெல்லாம் நோட்டு எண்ணும் எந்திரமெல்லாம் அதிகம் கிடையாது. நாம் ஒரு கட்டு எண்ணுவதற்குள் இரண்டு கட்டுக்களை முடித்திருப்பார்!அத்துடன் உள்ளே ஏதேனும் கள்ள நோட்டு இருந்தால் உடனே தனியே எடுத்து விடுவார்! மனுஷன் நம்மைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவர், நோட்டைக் கண்ணால் பார்க்காமலேயே எப்படிக் கண்டுபிடித்தார்?கேட்டால், `தம்பி , எல்லாம் அனுபவம் தான் ' என்பார். `நோட்டை விரல் தொடும் பொழுதே எல்லாம் தெரிந்து விடும்' எனச் சொல்லிச் சிரிப்பார்! வாடிக்கையாளர்கள் உணவு இடைவேளையில் வந்தால் கூட, கோபப்படாமல் பணத்தை வாங்கிக் கொள்வார்.சின்ன நோட்டு,அழுக்கு நோட்டு என்றெல்லாம் முகம் சுளிப்பதே கிடையாது! மிக முக்கியமானதைச் சொல்லணுமே! அவர் மிக நேர்மையானவர்.யாரேனும் தவறாக அதிகப் பணம் கொடுத்து விட்டால் உடனே திருப்பிக் கொடுத்து விடுவார்.அவர் பணப் பட்டுவாடா செய்தால் பலரும் அத...

இதுதான் நிறுவன கலாசாரமா?

Image
 இதுதான் நிறுவன கலாசாரமா? கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளில் ஒன்று உபெர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிராவிஸ் கலாநிக் ராஜினாமா செய்தது. அவர் தாமாக ராஜினாமா செய்யவில்லை. நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக நிறுவனத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளே இதற்கு காரணமாகும். சூசன் பிளவர் என்னும் பெண் பணியாளர் நிறுவனத்தில் நடக்கும் விஷயங்களை பொதுவெளியில் வெளியிட்டபோதுதான் நிறுவனத்துக்குள் நடக்கும் விஷயங்கள் தெரியவந்தது. பயிற்சி முடிந்த பிறகு, பணியில் சூசன் சேர்ந்திருக்கிறார். அவரது குழு மேலாளரால் தொந்தரவு (சாட் மூலம்) செய்யப்பட்டிருக்கிறார். ஹெச் ஆர் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய பிறகும் கூட நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தன்னுடைய வலைபதிவில் தெரிவித்திருக்கிறார். பல பெண் பணியாளர்களும் இதேபோல பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தன்னுடைய வலைபதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இவர் பணியில் சேர்ந்த சமயத்தில் 25 சதவீதம் பெண் பணியாளர்கள் இருந்திருக்கிறார்கள். படிப்படியாக குறைந்து 6 சதவீதத்துக்கு வந்துவிட்டது. இது தவிர பாலி...

தமிழ்நாட்டில் கூகுள்?

Image
தமிழ்நாட்டில் கூகுள்? சர்வதேச அளவில் பணி புரிவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் நிறுவனம் கூகுள். வழியைக் கண்டுபிடிப்பதற்கு கூகுள் மேப் உதவும். பிற தகவல்களை விரல் நுனியில் பெறுவதற்கு அனைவரும் நாடும் ஒரே இணையதளம் கூகுள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கூகுள் மையம் தமிழ்நாட்டில் தனது மையத்தைத் திறந்தால்... கடந்த வாரம் சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தில் கூகுள் மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியது பலருக்கு இனிப்பான செய்தி. சென்னையிலோ அல்லது மதுரையிலோ மிகப் பெரிய மையத்தை அமைப்பது தொடர்பாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக கூறினார். இந்த பேச்சு வார்த்தை சாத்தியமானால் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய சாதனையாகத்தான் இருக்கும். கலிபோர்னியா மாகாணம் மவுன்டன் வியூவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் உலக அளவில் பணி புரிவதற்கு ஏற்ற நிறுவனமாகத் திகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது நிறுவன ஊழியர்களது சம்பளம். அதேபோல பணியாள...

சபாஷ் சாணக்கியா: என்ன படிக்க வைக்கலாம்...?

Image
சபாஷ் சாணக்கியா: என்ன படிக்க வைக்கலாம்...? சமீபத்திய செய்தி படித்தீர்களா? அமீர்கானின் `டங்கல்' படத்தின் வசூல் ரூ 2,000 கோடியைத் தாண்டி விட்டதாம்! இந்தியத் திரைப்பட வரலாற்றில் இது ஒரு புது மைல்கல்! இந்தப் படம் சீனாவிலும் கூடச் சக்கை போடு போடுகிறதாம்! தமிழில் வெளிவந்ததே பார்த்தீர்களா, இல்லையா? பிலிம்பேஃர் அவார்டுகளில், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த சண்டைப் பயிற்சியாளர் என முக்கியப் பரிசுகளை அது அள்ளிக் கொண்டு போகக் காரணம் என்ன?அந்தப் படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது ? மகாவீர் சிங் (அமிர் கான்) ஹரியாணா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் மல்யுத்த வீரர். மல்யுத்தப்போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்பது அவரது கனவு. அவருக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகளே பிறப்பதால் மனம் தளர்கிறார்.ஆனால், தன்னைப்போல சண்டையிடும் திறன் தன் மகள்கள் கீதாவுக்கும் பபிதாவுக்கும் இயல்பாக இருப்பதைத் தற்செயலாக உணரும் பொழுது மீண்டும் அந்தக் கனவின் மீதான நம்பிக்கை துளிர்விடுகிறது! கிராமத்தினரின் ஏளனப் பேச்சுகளையும் பார்வைகளையும் மீறி அவர் தன் மகள்...

அலசல்: வங்கி வாரிய குழு தேவையா?

Image
அலசல்: வங்கி வாரிய குழு தேவையா? ஜிஎஸ்டி களேபரத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த பல விஷயங்கள் எதுவும் நம் நினைவில் இல்லை. ஜிஎஸ்டி காரணமாக வங்கி வாரிய குழுவில் (பிபிபி) நடக்கும் அக்கப்போர்கள் எதுவும் நம் கண்களுக்கு புலப்படவில்லை. பிஜே நாயக் குழுவின் பரிந்துரைகளின் பெயரில் வங்கி வாரிய குழுவை மோடி தலைமையிலான அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைத்தது. ஆனால் இந்த குழுவுக்கு அதிகாரம் இருக்கிறதா, இந்த குழு தேவையா? என்னும் விவாதங்களை வங்கித்துறையில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். நாயக் கமிட்டியின் பரிந்துரைகளில் மத்திய அரசுக்கும் வங்கி வாரியக்குழுவுக்கும் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது. தனிப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் இந்த குழுவால் செய்ய முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்த குழுவின் கவனத்துக்கு செல்லாமல் குழுவின் பணிகளில் மத்திய அரசால் தலையிடவும் முடியும். வங்கிகளின் தலைவர்களை நியமனம் செய்வது, வங்கிகளுக்கு உத்திகள் வழங்குவது நிதி திரட்டும் பணிகளில் உதவுவது உள்ளிட்ட பணிகளை இந்த குழு செய்யும். ஆனால் இது எதன...

எஸ்டிபி முறையை பயன்படுத்துவது எப்படி?

Image
எஸ்டிபி முறையை பயன்படுத்துவது எப்படி? கணிக்க முடியாத பங்குச் சந்தையில் எஸ்ஐபி (systematic investment plan) முறையில் முதலீடு செய்வதன் மூலம் லாபம் பெறலாம். இந்த முறையில் முதலீடு செய்வதன் மூலம் பங்குச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்கலாம். பங்குச் சந்தை உயர்வாக இருக்கும் போது குறைவான யூனிட்களும், சந்தை சரியும் போது அதிக யூனிட்களும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். எஸ்ஐபி முறையின் இன்னொரு வடிவம் எஸ்டிபி (Systematic Transfer Plan)ஆகும். எஸ்ஐபி முறை என்பது வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யப்படும். ஆனால் எஸ்டிபி என்பது வங்கி கணக்கில் இருந்து மொத்தமாக எடுத்து ஒரு மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்த பிறகு, அந்த பண்டில் இருந்து வேறு பண்டுகளுக்கு முதலீட்டை மாற்றுவது ஆகும். எப்படி செயல்படுகிறது?   எஸ்டிபி முறையில் ஒரே நிறுவனங்களில் உள்ள மியூச்சுவல் பண்ட்களில் மட்டுமே முதலீடுகளை மாற்றிக்கொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்து, அந்த தொகையை சீராக வேறு நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட்களுக்கு மாற்றும்...