Posts

Showing posts from January, 2018

சந்தேகம் சரியா? செல்போன் கோபுரக் கதிர்வீச்சால் புற்றுநோய் வருமா?

Image
ஓவியம்: வெங்கி எ ன் வீட்டுக்கு அருகில் செல்போன் கோபுரம் அமைக்கிறார்கள். அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் வரும் என்று கேள்விப்பட்டேன். இது சரியா? “செல்போன் கோபுரத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் மனித இனம், பறவை, விலங்கு, தாவரம் போன்றவற்றின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. விலங்குகளுக்கோ மனிதருக்கோ புற்றுநோய் ஏற்படுகிறது” எனச் சொல்வதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. ஆனால், “இந்தக் கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவைப் பொறுத்து, பிற்காலத்தில் மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது” எனப் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும், உலக சுகாதார நிறுவனத்தின் துணை அமைப்பான ‘பன்னாட்டுப் புற்றுநோய் ஆராய்ச்சி முனையம்’ (International Agency for Research on Cancer) எச்சரித்துள்ளது. காரணம், இந்தக் கதிர்வீச்சின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு அளவு, நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் மிகவும் குறைவான அளவிலேயே...

உயிர் வளர்த்தேனே நிஜமாகவே ஊட்டம் தருமா சிக்கன் 65?

Image
க ருத்தறியாக் காலத்துக்கு முன்பிருந்தே மனித இனம் விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை உண்டு வந்திருக்கிறது. மரத்தில் பழுத்துத் தொங்கும் கனிகள் கிடைக்காத காலத்தில், நிலத்தை அகழ்ந்து கிழங்குகளைத் தோண்டி உண்டது. அதுவும் கிடைக்காத காலத்தில் விலங்குகளைப் பிடித்து அறுத்து, அவற்றின் இறைச்சியை உண்டது. இதில் புனிதம், புனிதமற்றது என்ற பேச்சுக்கு இடமில்லை. வரலாற்றுக்குப் பிந்தைய காலத்தில் எத்தனையோ மதங்களும் இலக்கியங்களும் உயிர்ப் பாதுகாப்பின் பேரால் தொடர்ந்து வலியுறுத்தி வரும்போதும் இறைச்சி உண்பதை, கொல்லாமையை மனித இனம் கைவிடவில்லை. இன்றும் உலகில் பெரும்பாலானவர்கள் ஊண் உண்ணிகளே. என்னைப் பொறுத்தமட்டில் வாய் உண்ண அனுமதிக்கிற பொருட்கள் எதையும் மனிதர்களின் செரிமான மண்டலம் செரித்துவிடும். செரிக்கத் தகுதியான உணவு வகைகள் யாவும், அவனது உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாறும். அந்த வகையில் இறைச்சி உண்போரைக் கணக்கில் கொண்டு இறைச்சி பற்றிக் கதைப்போம். யார் சாப்பிடலாம்? விருப்பம் உடையவர்களும் செரிக்கும் திறனுள்ளவர்களும் இறைச்சியை உண்ணலாம். ஆனால், பயத்துடன் இறைச்சியை உண்டால் நேர்மறை விள...

அறியாமை தந்த ஆபத்து

Image
ந ம் நாடு 2020-ல் அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள நாடாகத் திகழப்போகிறதோ இல்லையோ அதிக உடல் உபாதைகளைக் கொண்ட இளைஞர்கள் நிறைந்த நாடாக விரைவில் மாறிவிடுமோ என்ற அச்சம் அதிகரித்துவருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் நம் உணவில் ஏற்பட்ட பிறழ்வு. இந்தப் பிறழ்வு காரணமாக, பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என வலியுறுத்தப்படுவதுபோல உணவு சார்ந்த கல்வியும் விழிப்புணர்வும் அவசியமாகிவிடும் தேவை உருவாகியுள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல; வளர்ந்த பெரியவர்களுக்கும் உணவு சார்ந்த விழிப்புணர்வைப் பரவலாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்றைக்குப் பெரும்பாலானோரின் உணவுப் பழக்கம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதே இதற்குக் காரணம். மைதா என்னும் மாயை தற்போதய பரவலான ‘ட்ரெண்டு’ மைதா மாவில் செய்யப்பட்ட உணவு வகைகளை அதிகம் உண்பதே. நாம் தற்போது அதிகமாக உண்ணும் பல உணவுப் பொருட்கள் மைதாவால் உருவாக்கப்பட்டவை என்பதை அறியாமல் உள்ளோம். மைதாவால் உருவாக்கப்படும் உணவுப் பொருட்கள் பட்டியலைப் பரோட்டா, பீட்சா, பர்கர் என நீட்டிக்கொண்டே போகலாம். பெரும்பாலான பேக்கரி, சிற்றுண்டி உணவு வகைகள் மைதாவால் தயாரிக...

இறைச்சி உணவு அச்சம் களைவோம்!

Image
பொ துவாக இறைச்சியை நீர்த்த குழம்பாகச் சமைப்பதற்குப் பதிலாகக் கெட்டியான (கிரேவி) பத‍த்தில் உண்பதையே பலரும் விரும்புகின்றனர். உணவின் எந்த வகையும் அடர் வடிவத்தில் உள்ளே செல்கிறபோது, அதைச் செரிக்க நமது இரைப்பைக்கு நிறைய நீர் தேவைப்படும். செரிப்பதற்கான நீரை உடலில் இருந்தும் எடுத்துக்கொள்ளும். தாகத்தை உருவாக்கி வெளியில் இருந்தும் நீரை குடிக்கச் செய்யும். இது செரிமான மண்டலத்துக்கு ஒரு கூடுதல் வேலை என்பதை நாம் உணர்வதே இல்லை. இந்தக் கூடுதல் வேலையைச் செரிமான மண்டலம் தொடர்ந்து செய்கிறபோது தொய்வுற்று இரைப்பைப் புண், குடல் புண், உணவுக்குழாய் எரிச்சல் போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு உள்ளாகிறது. எனவே, செரிக்கக் கடினமான இறைச்சி போன்ற உணவு வகைகளை உண்கிறபோது, கூடிய மட்டிலும் நீர்த்த வடிவத்தில் உண்பதுதான் உடலுக்கு நன்மை தரும். உண்ட உணவை உடனடியாகச் செரித்து உடலுக்கு ஆற்றல் வழங்கவும் இணக்கமாகும். தோலுடன் சமைப்பதே சிறப்பு பருப்பு வகைகளைத் தோலுடன் சமைப்பதே அதன் சத்துக்களை முழுமையாகப் பெறுவதற்கு ஏற்ற முறை என்று முன்னரே பார்த்துள்ளோம். அதுபோல் கோழியையும் தோலுடன் சமைப்பதே சிறந்த...

இதயம் காக்க இரண்டு முறை!

Image
ப ற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் மட்டுமே புத்துணர்வாக இருப்பதில்லை. நலமான பற்கள், நலமான இதயத்துக்கும் உதவுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். பல் ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள பாக்டீரியா ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களில் ரத்த உறைவை ஏற்படுத்துகிறது. இது பல்வேறு இதய நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. “பல் ஈறு நோய்களால் ஏற்படும் வீக்கமும் இதயத்தில் ரத்த உறைவு உருவாகக் காரணமாக இருக்கின்றன. இந்த ரத்த உறைவு, இதயத்துக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. அதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்” என்கிறார் டெல்லியில் உள்ள பி.எல்.கே. பல்நோக்கு மருத்துவமனையின் இதய நலத் துறைத் தலைவர் மருத்துவர் சுபாஷ் சந்திரா. வாயால் வால்வில் தொற்று இதய வால்வுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படும் ‘எண்டோகார்டிட்டிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்ட நீலம் என்கிற 18 வயதுப் பெண்ணுக்குச் சமீபத்தில் இவர் சிகிச்சை அளித்துள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு வாயில் உள்ள பாக்டீரியாவால் இதய வால்வில் தொற்று ஏற்பட...

தாய்லாந்து கதை: வாசனையைத் திருட முடியுமா?

Image
தா ய்லாந்து நாட்டின் மிகவும் பழமையான கிராமம் ‘பன் தா சோவன்’. அங்கு வசித்த பூன் நாம் மிகவும் ஏழ்மையானவர். நகரத்தில் வசிக்கும் உறவினரைச் சந்திக்கக் கிளம்பினார். பகல் முழுவதும் கால்கடுக்க நடக்க வேண்டியிருந்தது. அவரது மனைவி, சாதம் மட்டும் கொடுத்து அனுப்பியிருந்தார். வசதி இல்லாததால் காயோ, குழம்போ கொடுத்து அனுப்பவில்லை. ஒரு செல்வந்தர் வீட்டைக் கடக்கும்போது கமகமவென்று கறிக் குழம்பு வாசனை வந்துகொண்டிருந்தது. உடனே பூன் நாம்க்குப் பசி எடுத்தது. அந்த வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் அமர்ந்து, வசனையைப் பிடித்தபடியே பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டார். திருப்தியாகச் சாப்பிட்டு முடித்ததும் செல்வந்தர் வீட்டுச் சமையல்கார அம்மாவிடம், குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்டார். அவரும் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். ”அம்மா, நீங்கள் பிரமாதமாகச் சமைப்பீர்கள் போலிருக்கிறது! வாசனையே அருமையாக இருந்தது. அந்த வாசனையைப் பிடித்துக்கொண்டே வெறும் சாதத்தை வேகமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டேன். இல்லை என்றால் ஒரு வாய் சாதம் கூடச் சாப்பிட்டிருக்க முடியாது. உங்களுக்கு ரொம்ப நன்றி” என்று சொல்லி...

டிங்குவிடம் கேளுங்கள்: கண்களை மூடிக்கொண்டால் சுவை தெரியாதா?

Image
கரோலின் ஹெர்ஷல் கரோலின் ஹெர்ஷல் நாக்கில் தானே சுவை அரும்புகள் இருக்கின்றன. கண்களை மூடிக்கொண்டால் ஏன் சரியாகச் சொல்ல முடிவதில்லை, டிங்கு? –வி. சூரியகலா, அய்யம்பேட்டை. நல்ல கேள்வி சூரியகலா. சுவையை அறிவதற்கு நாக்கின் பங்கு மட்டும் போதுமானதில்லை. மூக்கு, கண்களின் பங்கும் முக்கியமானது. ஓர் உணவைப் பார்த்து, அதன் நறுமணத்தை முகர்ந்து, சாப்பிடும்போதுதான் சரியான சுவையை நாம் அறிய முடியும். கண்களை மூடிக்கொண்டால் அது என்ன உணவுப் பொருள் என்று நமக்குத் தெரியாது. அதனால் சரியாகச் சொல்ல முடியாது. மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டால் சுவை அறிதல் மிகவும் கடினமாகிவிடும். கண்களை மூடிக்கொண்டு, மைசூர்பா சாப்பிட விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நாக்கில் ஒரு கற்கண்டைத் தேய்த்தால் நீங்கள் அதை மைசூர்பா என்றுதான் சொல்வீர்கள். ஏனென்றால் மைசூர்பா எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். அதைக் கற்பனை செய்துகொண்டு காத்திருப்பீர்கள். அந்த நேரம் நாக்கில் இனிப்பு பட்டதும், அதை மைசூர்பா என்று நினைத்துக்கொள்வீர்கள். கண்களையும் மூக்கையும் மூடிக்கொண்டு, கேரட்டைச் சாப்ப...

கதை: நரி ருசித்த அப்பம்!

Image
மீ னாட்சி பாட்டி வயலூரில் இட்லி கடை வைத்து நடத்திவந்தார். அவர் சமைக்கும் பலகாரங்கள் மிகவும் சுவையாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும். அதனால் பக்கத்து ஊரில் இருந்து கூட இட்லி வாங்கிச் செல்வார்கள். கடையில் எப்பொழுதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். பாட்டிக்கு அடுப்பு எரிக்க, சுள்ளிகளைக் கொண்டுவந்து தருவது அவரது பேரன் குருபரன்தான். ஆனால் அவர் காய்ச்சலில் படுத்துவிட்டதால், இன்று பாட்டியே காட்டுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. மதியச் சாப்பாட்டுக்கு ஆப்பமும் தேங்காய்ப்பாலும் எடுத்துக்கொண்டார். ஒரு மரத்தில் தூக்குச் சட்டியை வைத்துவிட்டு, சுள்ளிகளை எடுக்க ஆரம்பித்தார் பாட்டி. அருகில் இருந்த புதருக்குள் குள்ளநரி ஒன்று பசியோடு இருந்தது. வயதாகிவிட்டதால், முன்புபோல் வேட்டையாட முடியவில்லை. பாட்டியின் ஆப்பம், தேங்காய்ப் பால் வாசம் அதன் மூக்கைத் துளைத்தது. சத்தம் இல்லாமல், தூக்குச் சட்டியை எடுத்துக்கொண்டு புதருக்குள் மறைந்துகொண்டது. ஒரு கட்டு சுள்ளிகளைச் சேகரித்த பாட்டி, சாப்பிட வந்தார். தூக்குச் சட்டியைத் தேடினார். “ஐயோ… தூக்குச் சட்டியைக் காணோமே? யார் எடுத்தி...

கதை: கடல் நாட்டின் கதை

Image
க டலுக்கு அடியில் ஒரு நாடு இருந்தது. அங்கே இருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள். ஆனால், கடலுக்கு வெளியிலிருந்து வரும் அந்நியர்களை அந்த நாட்டு மன்னர் அனுமதிக்க மாட்டார். அப்படி எப்போதாவது வருபவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிடுவார். ஒருநாள் கடற்கரையோர ஊரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றார். அப்போது கடல் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன், நாட்டை விட்டு வெளியே வந்தான். மீனவரின் தூண்டிலில் சிக்கிவிட்டான். “அட! ஒரு குட்டிப் பையன் சிக்கியிருக்கிறானே!” என்று மீனவர் ஆச்சரியமடைந்தார். அந்தச் சிறுவனின் உடல் மீன்போலவும் அவன் தலை மனிதத் தலையாகவும் இருந்தது. அவனை விடுவித்த மீனவர், தன் நாட்டு மன்னரிடம் சென்று இந்த விஷயத்தைக் கூறினார். மன்னர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். ”இப்படிப்பட்ட விநோத மனிதர்களையும் கடலுக்கு அடியில் இருக்கும் நாட்டையும் காண ஆவலாக இருக்கிறேன். அதனால் கடலுக்குள் செல்லும் விதத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குங்கள்” என்று உத்தரவிட்டார் மன்னர். கப்பல் கட்டுவதில் திறமை வாய்ந்தவர்கள், குறுகிய காலத்தில் ந...

டிங்குவிடம் கேளுங்கள்: வலி தெரியாவிட்டால் என்ன ஆகும்?

Image
வலி தெரியாவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! வலி தெரிய வேண்டியது அவசியமா, டிங்கு? சாதாரணமாகப் பார்த்தால் வலி தெரியாவிட்டால் நன்றாகத்தான் இருக்கும்! ஆனால், வலி தெரியாவிட்டால் நன்றாக இருக்காது. காலில் அடிபட்டு ரத்தம் வருகிறது. வலி தெரியாவிட்டால் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். ரத்தம் வருவதைக் கவனித்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். வலி தெரிவதால்தான் உடனே அந்தப் பகுதியில் பிரச்சினை என்று, அதை நிறுத்துவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். உடலில் எந்த உறுப்பில் பிரச்சினை என்றாலும் உடனே மூளை நரம்புகளுக்குக் கட்டளையிட்டு, வலி மூலம் நமக்குத் தெரிய வைக்கிறது. நாமும் தலைவலி, வயிற்றுவலி, மூட்டு வலி என்று வந்தவுடன் அதற்கு ஏற்ற மாதிரி சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம். இப்போது சொல்லுங்கள் ஹரிஹரசுதன், வலி தெரியாவிட்டால் நல்லதா? நான் பேச்சுப் போட்டியில் ஐன்ஸ்டைன் பற்றிப் பேச இருக்கிறேன். விஞ்ஞானி என்ற அளவில் பல விஷயங்கள் தெரியும். அவரைப் பற்றி அதிகம் அறியாத சில தகவல்களைக் கூற முடியுமா, டிங்கு? ஐன்ஸ்டைன் நான்கு வயது வரை சரியாகப் பேச முடியாமல் இருந்தார். அதனால் சரியாகப் பேச முடியாதவ...