கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்

கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்


பல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை செய்த மனிதர்களின் கதைகளை (story) படிக்க பிடிக்கும். ஏனென்றால் அந்த கதைகளில் அவர்கள் சந்தித்த சவால்கள் மற்றும் கஷ்டங்கள், எப்படி சவால்களை சமாளித்தார்கள், அவர்கள் கண்ட தோல்விகள், தோல்விகளை தோற்கடித்து எப்படி வெற்றிப் பெற்றார்கள், அவர்களின் வெற்றி மந்திரங்கள், அவர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள் போன்ற ஊக்கமளிக்க கூடிய பல நேர்மறை விஷயங்கள் இடம் பெற்றிருக்கும்.
 Story Telling
இதே போல் பல தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் தங்களின் வெற்றி கதைகளின் மூலம் தங்கள் நிறுவனத்தை, தயாரிப்பை, தொழிலை, பிராண்டை பிரபலப்படுத்தியவர்கள் உண்டு. இன்றைய பல ஊடகத்தில் (media) பல தொழில்முனைவோர்கள் பற்றிய கதைகள் வெளிவருகின்றன. பல மேடைகளில் (platform) வெற்றி அடைந்தவர்கள் தங்கள் கதைகளை பகிர வாய்ப்பு கிடைக்கின்றன. இது மற்றவர்கள் வெற்றி பெற பயனுள்ளதாகவும் இருக்கிறது.

இதேபோல் தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களின் கதைகளை சொல்லியும் (storytelling), உருவாக்கியும் தங்களது நிறுவனத்தின் பிராண்ட் இமேஜ் (brand image) உருவாக்கலாம், பிரபலப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம்.

இவ்வாறு தொழில் முனைவோர்கள், சாதனையாளர்கள் தங்களது கதைகளை சொல்ல மற்றும் படைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.
#  Structure of a Story
அமைப்பு (Context):
எந்த ஒரு கதைக்கும் உரை (text), உள்ளடக்கம் (content) மற்றும் வாக்கியம் என்பது ஒரு உயிரோட்டம் போன்றது. இதை எப்படி அமைக்கிறோம் என்பதை பொறுத்தே படிப்போரின் கவனத்தை ஈர்க்க முடியும். சொல்லும் கதைகளுக்கு உள்ளடக்கம், உரை மற்றும் வாக்கியம் நன்றாக அமைக்க வேண்டும்.
கதைகள் கேட்போரின், படிப்போரின் கவனத்தை இருப்பதாய் (grabs attention), உற்சாகத்தை உருவாக்கும் விதத்தில் (generates excitement), சுவாரஸ்யமானதாகவும் (interesting), கதையில் நம்பகத் தன்மை மற்றும் உண்மை தன்மை  கொண்டதாய் (true story), தேவையான பின்புலம் (necessary background) இருப்பதாய் அமைய வேண்டும்.
#  4 கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும்
1.  எங்கே மற்றும் எப்பொழுது (where & when) : வாழ்க்கை பயணம், தொடக்கம், சம்பவம், வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி போன்ற கதை சார்ந்த சம்பவங்கள் எங்கே மற்றும் எப்பொழுது நடந்தது என்பதை குறிப்பிடவேண்டும்.
2 . முக்கிய கதாபாத்திரம் யார் (Who is the main character?): கதையின் முக்கிய கதாபாத்திரம் யார் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்.
3.  What does the character want? கதையின் பாத்திரம் என்ன சாதிக்க விரும்பினார், அவரின் குறிக்கோள், நோக்கம் (objective) என்ன என்பதை விளக்க வேண்டும். Facebook நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க்  “உலகம் முழுவதும் இணைக்கப்படவேண்டும் மற்றும் வெளிப்படையாக உருவாக்க வேண்டும்” என்ற குறிக்கோள் வாசகத்தை அடிக்கடி குறிப்பிடுவார்.
4. Who and what is getting in the way?  யார் மூலம் மற்றும் என்ன தடைகள் (barriers), தடங்கல்கள் (obstacles) ,பின்னடைவுகள் (setbacks), தோல்விகள், போராட்டங்கள் (battle), பெற்ற வலிகள் (pain), புறக்கணிப்புகள், சவால்கள் (challenge) போன்றவைகள் இடம்பெற வேண்டும்

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்