பாக்கு மட்டை தட்டு தொழில்



பாக்கு மட்டை தட்டு தொழில்



இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்புமிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து சுற்றுபுறச்சூழலைப் பாதிக்காத பிளேட்டுகள் தயாரிக்கப்பட, இப்போது அது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க என பெருமளவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளைவு வீணான பொருள் விலைமதிப்பிற்குரிய பொருளாக மாறிவிட்டது.
இதன் காரணமாக, பாக்கு மட்டை தயாரிக்கும் தொழில் இப்போது கனஜோராக நடந்து வருகிறது. சிறுதொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த தொழில் நிச்சயம் கை கொடுக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஏதுவான தொழில் இது.  
மூலப்பொருள்!
பாக்கு மட்டைதான் இந்த தொழிலுக்குத் தேவையான அதிமுக்கிய மூலப்பொருள். பாக்கு மட்டைகள் கேரளா, ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கர்நாடக மாநிலம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து கிடைக்கும் மட்டைகள் அதிக நீளம் கொண்டவை என்பதால் பெரும் பாலானவர்கள் அங்கு கிடைக்கும் பாக்கு மட்டையைத்தான் அதிகம் வாங்குகின்றனர்.
மேலும்  தகவலுக்கு இந்த லிங்கை பயன்படுத்திக்காெள்ளுங்கள் :

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்