எனக்கு ஏற்ற தொழில் எது? எப்படித் தீர்மானிப்பது? குழப்பமா?


உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா என்பது மிகப் பெரியவளமானசந்தைநாம்தான் இதனை ஒரு வாய்ப்பாக உணர மறுக்கிறோம்மேம்போக்கான காரணங்கள் கூறி சுயதொழிலை நிராகரிக்கிறோம்.

சரிஎனக்கு ஏற்ற தொழில் எது என்பதை எப்படித் தீர்மானிப்பது?

ஒரு சிறிய  உதாரணம்.

கண்மணி அதிகம் படித்தவரல்லர்பொருளாதார நெருக்கடிகளைச்சமாளிக்கவேண்டுமானால் வேலைக்குப் போயே தீரவேண்டும்ஆனால்அதற்கும் பல தடைகள்இவருக்கு விதவிதமாக உணவுப் பண்டங்கள்சமைப்பதில் அலாதி பிரியம்எப்போதும் ஏதாவது ஒன்று செய்துகொண்டேயிருப்பார்ஒரு ஞாயிற்றுக்கிழமைபுது வகையான இனிப்புபண்டத்தை செய்ய முயற்சி செய்தார்வீட்டிலுள்ளோர் அனைவரும்பாராட்டினர்.

சில தினங்களில் அவருடைய கல்யாண நாள் வந்ததுதன்னுடைய நெருங்கியஉறவினர்களையும் நண்பர்களையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார்என்ன செய்யலாம் என்று வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள்ஒருமித்த குரலில் இதைத்தான் சொன்னார்கள்அன்று ஒரு இனிப்புசெய்தாயேஅதையே செய்துவிடு.

கண்மணியும் மற்ற உணவு வகைகளோடு சேர்த்து இந்த இனிப்பையும்கொஞ்சம் அதிகமாகச் செய்துவிருந்தினர்களுக்குப் பரிமாறினார்விருந்தும்இனிதே முடிந்ததுஅனைவரும் பாராட்டித் தீர்த்தபிறகே வெளியேறினார்கள்.

ஒரு நாள் பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தை தற்செயலாகப் பார்த்தார்ஒரு போட்டிக்கான விளம்பரம் அதுநல்ல கைமணமுள்ள பெண்கள் தங்கள்திறமையை வெளிக்கொணர ஒரு போட்டியை அறிவித்திருந்தார்கள்கண்மணியும் வீட்டிலுள்ளோர் விருப்பத்துக்கும்வற்புறுத்தலுக்கும்கட்டுப்பட்டு அந்தப் போட்டிக்கு நுழைவுத்தாளை அனுப்பினார்பலத்தபோட்டிக்கு நடுவில் அவர் முதல் பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தப் பரிசளிப்பு விழாவை ஒட்டி நடந்த கண்காட்சியில் ஒரு ஸ்டால்போடுவதற்கு அனுமதி அளித்தனர்தனக்குத் தெரிந்த அந்த இனிப்புவகையைச் செய்து அடுக்கி வைத்தார்அனைத்தும் விற்றுத் தீர்ந்த பிறகுகிடைத்த லாபம் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.

சுயதொழிலாநானா என்று காத தூரம் ஓடிப்போன கண்மணிக்குள் ஒரு சிறுபொறிபணம் மட்டுமா கொடுக்கிறது இந்தப் புதிய முயற்சிபாராட்டுகள்தொழில்திருப்திஅளவிடமுடியாத மகிழ்ச்சிவேறு என்ன வேண்டும்?

சீரியசாக யோசிக்கத் தொடங்கினார்தொழில் முயற்சி தொடங்கியதுசிலபயிற்சி மையங்களில் இணைந்து வேறு பல புதிய பதார்த்தங்களைத் தொழில்ரீதியாகச் சமைக்கக் கற்றுக்கொண்டார்வங்கியில் சிறு தொகை கடன்வாங்கினார்சொந்த நிறுவனம் வளர்ந்ததுஇன்று ஐந்துஆறு பெண்களுக்குவேலைவாய்ப்புக் கொடுத்துமிகச் சிறந்த முறையில் தொழில் செய்துவருகிறார்.

எதற்கு ரிஸ்க் வேறு ஏதாவது செய்யலாமே என்று இன்று யாராவது அவரிடம்சென்று கூறினால் நிச்சயம் அவர் அதனைப் பொருட்படுத்த மாட்டார்சுயதொழில் அவரை மட்டுமல்ல அவரைச் சார்ந்துள்ள சிலரையும் இன்று வாழவைத்துக்கொண்டிருக்கிறதஇதில் கிடைக்கும் சுகம்சந்தோஷம்ஆத்மதிருப்தி ஆகியவற்றை அனுபவிப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.

கண்மணியின் கதை நமக்கெல்லாம் ஒரு பாடம்அவரைப் போல் நமக்குள்ளும்பல விருப்பங்களும் தனித் திறமைகளும் ஒளிந்துகொண்டிருக்கின்றன.

நம்மில் பெரும்பாலோர் நமது சுய மதிப்பீட்டில் பெரும் தவறு செய்துவிடுகிறோம்இதன் காரணமாக ஒன்று நம்மைப் பற்றி மிக தாழ்வானஅபிப்பிராயத்தை உருவாக்கிக்கொள்கிறோம்அல்லது மிதமிஞ்சிய அளவுக்குநம் திறமையின்மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஈடு எவரும் இல்லை என்றுகூறிக்கொள்கிறோம்.

இந்த இரண்டு நிலையையும் எடுக்காமல் நடுநிலையோடு நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துநமக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளைத் தூசித்தட்டிவெளிக்கொணர்ந்துஉண்மையான உழைப்பை முதலீட்டாக்கினால் வெற்றிநிச்சயம்.

சுயதொழிலுக்கு வர விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டியவிஷயங்கள் இவை.

சுய தொழிலில் செய்த முதலீட்டுக்கு உடனடி அறுவடை கிடைக்காதுஇதைமிகுந்த கவனத்தில் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்செய்யும்தொழிலின் தன்மையைப் பொறுத்து லாபம் ஈட்டுதல் என்பது அந்தந்தச்சூழலுக்கேற்ப மாறுபடும்அதனால் பொறுமை மிக மிக அவசியம்.

எந்தத் தொழிலும் கடலில் கரைக்கும் உப்பாக மென்மேலும் முதலீட்டைஇழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டதுதொழில் செய்பவர்அவரின்பணபலம் என்னதான் எதுவரை தாக்குப் பிடிக்க முடியும் என்பதில் சீரியகவனத்தோடு செயல்படவேண்டும்முதலீட்டுக்காகத் திட்டமிடும்போதுஇதனை மனத்தில் வைத்திருக்கவேண்டும்.

தொழிலின் சந்தையைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து திரட்டவேண்டும்மாறும் சூழலுக்கேற்ப முடிவுகளை மாற்றிச் செயல்படவும் தெரிந்து கொள்ளவேண்டும்.

உணர்வுப்பூர்வமாக அணுகுமுறை தொழிலுக்குஅதுவும் முக்கிய முடிவுகள்எடுக்கும் போதுதவிர்க்கப்பட வேண்டும்மாறாக புத்தி பூர்வமானஅணுகுமுறை கையாளப்படவேண்டும்உறவுநட்பு போன்ற வலைப்பின்னல்களில் மாட்டிக்கொண்டு தொழிலைச் சிக்கலாக்கிக்கொள்ளக்கூடாது.

கடன் கொடுக்க வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தயாராக இருந்தாலும்கூடிய மட்டும் கடனைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு தொழில் ஆரம்பிக்கும் வரைதான் தொழிலதிபரின் முயற்சியும் அறிவுகூர்மையும் முதன்மை பெறுகின்றனஅது தொடர்ந்து வளரும் போதுஅதன்சாதகங்கள் தொதிலதிபரைச் சேர்ந்தாலும்அதன் பாதகங்கள் அவரைமட்டுமல்லாது அதை சார்ந்துள்ள பலரையும் பாதிக்கும்எனவேதொழிலைத்தீவிரமாக நேசிப்பவர்கள் மட்டுமே இதில் காலடி எடுத்து வைக்கவேண்டும்பகுதி நேரமாகச் செய்து பார்ப்போமே என்று அலட்சிய மனோபாவத்துடன்தொழிலில் இறங்குவது பயனளிக்காது.

இன்றைய சூழலில் சிறுதொழில் செய்ய முன்வருபவர்கள் தொழிலின்பல்வேறு பகுதிகளைப் பற்றி ஓரளவுக்காவது அறிவைவளர்த்துக்கொள்ளவேண்டும்உதாரணம்சேல்ஸ் & மார்க்கெட்டிங்ஆள்கள்நியமித்தல்நிதிநிர்வாகம்மனித வளம்தொழில்நுட்பம் ஆகியவை.

எல்லாவற்றுக்கும்  பிறரை முழுவதுமாக அண்டியிருக்கக்கூடாதுதொழிலைதடையில்லாமல் நடத்திச் செல்லவேண்டுமானால்தொடர்ந்து நம்திறமைகளைக் கூர் தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த விஷயங்களை மனத்தில் வைத்துக்கொண்டு பொறுப்புணர்ச்சியுடனும்நம்பிக்கையுடனும் சுயதொழிலில் ஈடுபடுபவர்களால் நிச்சயம் தங்களுடையஇலக்கை அடையமுடியும்.

Comments

  1. அருமையான தகவல் நன்றி சார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்